Posts

Showing posts from August, 2020

உதயகீதம் எஸ்.பி.பி.

Image
ஆயிரம் நிலவே வா வில் தென்றலாய் வருட ஆரம்பித்து, இன்று சும்மா கிழி கிழி என்று உரக்க ஒலித்த குரல். சங்கராபரணமோ! என பக்தியில் திழைத்த  காதல் ரோஜாவே என்று உருகிய தங்கதாமரை மகளே என்று மருகிய சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறிய  மக்கள் திலகம்,நடிகர் திலகம் காதல் மன்னன்,காதல் இளவரசன் நவரச நாயகன்,மைக் மோகன் தல,தளபதி ராமாராவ்,நாகேஸ்வர ராவ் பால கிருஷ்ணா,சிரஞ்சீவி, பவன்கல்யாண்,மகேஷ்பாபு, நாகார்ஜூனா,நாகசைத்ன்யா மம்முட்டி மோகன்லால் ராஜ்குமார் விஷ்ணுவர்த்தன் சல்மான் சஞ்சய்... என அனைவரின்  காதல்,மோதல்,உற்சாகம், கருத்து,துன்பம்,துயரம் என்று யாவருக்கும் பொருந்தும் குரல். மென்மை,வலிமை ஆக எந்த தொனியிலும்,  ஏற்றமாய் ஊக்கமாய் பாடும் கம்பீரம், உதயகீதம் பாடி உயிர்களைத் தொட்ட வார்த்தைகளில் என்றும் ஒரு குழைவு. பயணங்களில்,விஷேசங்களில், தனிமையில், கூட்டத்தில் எங்கும் துணை நிற்கும் ஒரே குரல். நாற்பதாயிரம் பாடல்களை கடந்து இன்றும் இந்த கொரானா கோரதாண்டவத்திலும், நேரலையில்,பாடல் பிறந்த  கதை சொல்லி,பாடி மகிழ்வித்த குரல். சூப்பர் ஸ்டார்களின் தெலுங்கு குரலாய் பேசி, காதலனுக்கு அப்பாவாய் டான்ஸ் ஆடி, ச...

டிக் டாக் டிக் டாக்

                    “காலம் பொன்போன்றது” “காலம் யாருக்காகவும் காத்திருக்காது” “உலகில் உள்ள எந்த செல்வத்தினாலும் இழந்த காலத்தை வாங்க முடியாது” போன்ற பழமொழிகள் பல கேட்டிருக்கிறோம்.காலத்தை பற்றி நிறையச்சொல்லி ஒழுக்கத்தை வளர்த்திருக்கிறோம்.ஆனால் காலம் என்ற ஒன்றே இல்லை,அது ஒரு மாயை என்று கூறுபவர்கள் உண்டு.   Timelessness  என்று ஒரு தியரி, அதாவது, நீங்கள் இப்போது பத்துமணி,இருபது நிமிடம்,முப்பது விநாடிகள் என்று சொல்லும்போதே அந்த நேரம் இருப்பதில்லை.                 “DARK”  என்ற ஜெர்மனிய மொழித்தொடர் காலத்தைப் பற்றி சயின்ஸ்ஃபிக்சன் வடிவில் கதை சொல்கிறது.கற்பனை நகரமான வின்டண் -இல்,காலத்தில் பின்நோக்கி சென்றால்,முன்நோக்கி சென்றால் என்னவாகும்,என்ன செய்ய முடியும் என்று முயற்சி செய்யும் கரெக்டர்கள். முப்பத்திமூன்று வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் பேரழிவு,மூன்று உலகங்கள்,நான்கு குடும்பங்கள்,ஏழு காலகட்டங்கள்,ஒரே மாதிரி நிகழும் சம்பவங்கள்,முடிவில்லாத காலச்சக்கரம் எ...