Posts

Showing posts from June, 2020

தி.ஜானகிராமனின் நூற்றாண்டு —என் பகிர்வு.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்! தி.ஜானகிராமன் எனக்கு பரிச்சயமானது  நான் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும்போது .என் தோழிகள் இருவர் தர்க்கம் செய்து கொண்டு இருந்தனர்,’அது எப்படி 11 வருஷம் மூத்த பெண்ணை ஒரு பையன் லவ் பண்ண முடியும்,நினைத்தே பார்க்க முடியவில்லை’என்ற வார்த்தைகள் கேட்டன.நான் ஆர்வமானேன்.”மோக முள்” என்ற நாவலை பற்றிய கலந்துரையாடல் அது.அந்த நாவலை இரவல் வாங்கிப்படித்தேன்.ஏற்கனவே ராஜேஷ்குமார்,பட்டுகோட்டை பிரபாகர்,இந்துமதி,சிவசங்கரி,லெஷ்மி நாவல்களும்,கொஞ்சம் சுஜாதாவும் வாசித்த பழக்கம் உண்டு.பள்ளிநாட்களில் ஆங்கிலத்தில் கதைகள் வாசித்தால்தான் ஆங்கிலத்தில் பிழை இல்லாமல் எழுதவும்,பேசவும் வரும் என்று சார்லஸ் டிக்கன்ஸ்,ஆர்.கே.நாராயணன் வாசித்தேன்.தமிழ் இலக்கியத்தில் பொன்னியின் செல்வன் தவிர்த்து கிளாசிக் தமிழ்க் கதைகள் அறிமுகம் இல்லை,”மோகமுள்” தான் முதல்.யாரிடமும் நாவலின் பெயரைச்சொன்னால் நம்மை தப்பாக நினைப்பார்களோ என்ற பயம் வேறு.மெதுவாகப்படித்தேன்.தி.ஜா.வின் வார்த்தைகளின் ஜாலம் மெதுவாகப் படித்தால்தான் உணரமுடியும்.தண்ணீரில் கல் எறிந்தால் மெல்ல வட்டவட்டமாக வருமே அதுமாதிரி.தி.ஜா.வின் வார்த...

தோழா—தோழி

முகநகநட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. நட்புக்கு இலக்கணமாய்,துரியோதனன்-கர்ணன்,குசேலர்-கிருஷ்ணர், இராமன்-சுக்ரிவன் என்று இந்திய இதிகாசங்களில் ஆரம்பித்து ரோமாபுரி வரலாற்றில் ஒரு ஜூலியஸ் சீசர்-மார்க் ஆண்டனி வரை ஒரே ஆணாதிக்கம் தான். நண்பேன்டா!என் நண்பனுக்காக நான் உயிரையும் கொடுப்பேன்,அவன் காதலை சேர்த்து வைக்க என்ன வேணும்னாலும் செய்வேன்—இந்த வசனங்கள் நாம எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிறோம்.நேற்று,பென்குயின்,என்றுஒரு படம்,அமேசான் ப்ரைம் ல பார்த்தேன்.நினைத்துக்கூட பார்க்கமுடியாத கொடுமையான சைக்கோபாத் சம்பவங்கள்,அதை அரங்கேற்றுவது ஒரு தோழி.பெண்கள் என்றாலே பொறாமை குணம் உடையவர்கள் என்ற ஒரு பிம்பத்தை,இதிகாசங்கள்,நாடகங்கள்,திரைப்படங்கள்,கதைகள் இப்பொழுதுள்ள டிக்டாக்,மீம்ஸ் வரை பறைசாற்றுகின்றன.             ஆண்கள் எப்போதும் நட்பு வட்டத்திலேயே இருப்பார்கள்.சேர்ந்து டூர்,டின்னர்,டிரிங்ஸ்,கிளப் என்று தொடர்பில் இருப்பார்கள்.ஆனால்,பெண்களுக்கோ,திருமணத்திற்குப்பின்னால், குழந்தைகள் வளர்த்து,மாமியார்,மாமனார் சேவித்து,குடும்ப ச...

முடக்கம்

ஊரடங்கின் ஆரம்பத்தில்,  விதவிதமான உணவு பதார்த்தங்கள் செய்வது, அதை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேடஸ், வீட்டிலேயே யோகா,,எட்டு வரைந்து வாக்கிங், வீட்டில் அனைவரும் வேலைகளை பகிர்வது, சீட்டு விளையாடுவது,சினிமா பார்ப்பது என்று மூன்று வாரங்கள் சமூக வலைதளங்கள் களைகட்டின பழைய சித்திதான் நல்லாருக்கு, இராமாயணம்,மகாபாரதம் பார்க்கிறோம், நெட்பிளிக்ஸ் ல மணிகஸ்ட் சூப்பர். சிலநாட்களில்,இதல்லாம் எப்ப முடியும்னே தெரியலையே, போரடிக்குது, சேக்ஸ்பியர் சொன்னமாதிரி எல்லாநாட்களும் விடுமுறையாக இருந்தால், விடுமுறைநாட்கள் கூட மனச்சோர்வடையச் செய்யும். ஜனவரில சீனாக்காரன் கண்டதை சாப்பிட்டு அவதிபடுறான், பிப்ரவரில நம்மூர் வெயிலுக்கெல்லாம் அது வராது, மார்ச்ல நம்ம இந்தியன் ஜீனுக்கெல்லாம் லேசா வந்திட்டுபோயிடும் ஏப்ரலில் இந்தியால இறப்புவிகிதம் குறைவுதான் மேமாதம் சென்ரல்,ஸ்டேட் கவர்மெண்ட் எதுவுமே சரியில்லை முதல்லயே ஏர்போர்ட்ல்லாம் மூடியிருக்கணும் ஜூன்ல மூயுடேட் ஆயிருச்சாம்,எந்த அறிகுறியும் தெரியாம  சின்ன வயசு ஆட்கள் இறக்கிறார்களாம். இப்ப எல்லாத்தையும் அரசாங்கம் மூடலாமே! ...