Posts

Showing posts from July, 2020

கால சக்கரம்

               சந்தோஷ் இன்று சந்தோசமாக இருக்கிறான் .அவனுக்கு அது கிடைத்துவிட்டது. அவனால் அதை நம்ப முடியவில்லை ,அவன் முன்னால் இருந்த டைம்மெஷினை பார்த்து அளவிலா ஆனந்தம் அடைந்தான். இதன் மூலம் காலத்தின் முன் சென்று அவன் செய்த பெரிய தவறுகளை மாற்றலாம். டைம்மெஷினை ஆன் செய்தான். அதன்மேல் ஏறி நின்றான்.வேகமாக சுழன்றது.                  சந்தோஷ் வந்து சேர்ந்த இடம் ஒரு பஸ் ஸ்டாப்.  நின்று இருந்தவர்களின் ட்ரஸிங்   வித்தியாசமாக இருந்தது.  ஆண்கள் ப்ளாசோ பேண்ட் போட்டிருக்கிறார்கள். அங்கிருந்த டீ கடையில் தொங்கிய தினமுரசை கவனித்தான், 12.7.1984. சரியாகத்தான் வந்திருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டான்.                     இருபுறமும் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தான். Spring Field Nursery—- என்ற போர்ட் போட்ட கட்டிடத்தின் உள்ளே சென்றான். குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள...

கற்றலும் பெற்றலும்

                                         கற்றலும் பெற்றலும்          பள்ளி இறுதி ஆண்டு மதிப்பெண் முடிவுகள் வெளியிடப்பட்டன.பாரதி ஆர்வமாக தன் மதிப்பெண்களை சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.பிரமாதமான மதிப்பெண்கள் இல்லை.யாரிடமும் சொல்ல கொஞ்சம் தயக்கமாக இருக்கும்.ஆனால் பாரதி அதைப்பற்றி கவலைப்படவில்லை.பாரதிக்கு கணிதம் மற்றும் அறிவியலில் ஆர்வம் இல்லை.சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் செல்லவில்லை.அதுக்கெல்லாம் பணவசதி இல்லை.தனக்கு புரிந்த,முடிந்த படிப்பைப் படித்து இந்த மதிப்பெண்கள் வாங்கி இருக்கிறாள்.                      உடன்படிப்பவர்கள் எல்லாம் போன் செய்ய ஆரம்பித்தார்கள்.”நீ மேக்ஸ் இல் எவ்வளவு?,கெமிஸ்ட்ரி,பயோ வில் நல்ல மார்க்கா? என்று தாரிணி கேட்டாள்.பாரதி சொன்ன பதிலைக் கேட்டு,”ஏன் குறைந்துவிட்டது? மறுமதிப்பீடுக்கு அப்ளை செய்யப் போகிறாயா?” என்றெல்லாம் கேட்டா...

அம்மாச்சி

                                        ‘எல்லாமே முடிஞ்ச்சி போச்சு,நீ உடனே கிளம்பி வா’ என்று அலைபேசியில் தகவல் வந்ததும்,பரபரப்பாக கிளம்பினேன்.விமான நிலையத்தில் அமர்ந்து கொண்டு,அழுது கொண்டே வாட்ஸ் அப் டிபி மாற்றி,அந்தப் படத்தை பார்த்துக்கொண்டே பழைய நினைவுகளில் மூழ்கினேன்.என் முதல் பிறந்த நாள் முடிந்த உடனே அம்மாச்சியுடன் அவர்கள் ஊருக்கு சென்றுவிட்டேன் என்று என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன்.பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு சேரும்வரை அம்மாச்சி வீட்டில் தான் வளர்ந்தேன்.ஆச்சி இடுப்பில் உட்கார்ந்து கொண்டு “வேகமா நடங்க வேகமா” என்று சொல்லுவேன்.ஐந்து அடி உயரம் கூட இல்லாத ஆச்சி,என்னை ஐந்து வயதுக்கு பிறகும் சுமந்தார்.குச்சி ஐஸ்,வறுத்தகடலை,சோன்பப்டி,ஜவ்மிட்டாய் என்று தெருவில் விற்று கொண்டுவரும் அனைத்தையும் கேட்பேன்,வாங்கித்தருவார்கள்.ஆச்சியுடன் தினமும் காய்கறி மார்ககெட் செல்வேன், கலாக்காய்,கடுக்காப்பழம்,நெல்லிக்காய், கொடுக்காப்பழம்,பளம்ஸ் என சீசனுக்கு ஏற்ப அனைத்...

Marriage.com

Marriage has pains, but celibacy has no pleasures.——Francis Bacon.                   Fancy play of words are in full swing when we talk about love and marriage.Marriage is an important and inevitable event in our life whether we like it or not.We must get married at an appropriate time to have the advantages.Marriage is an equivalent to responsibility and compatibility.A successful marriage need not be full of romantic candlelight dinners and bouquets.Many traditional marriages go rock steady through years without a single romantic outing.Husband may not appreciate the drawings and paintings of the wife ,but he works and plan perfectly for the welfare of the family which is also essential.Some couples always have romantic getaways and parties but careless for the upbringing of the children or taking care of the elders of the family.Personal space is possible only in space not in a marriage.A successful marri...